யாழில் கோர விபத்து!!

 


வல்லை பகுதியில் வாகனம் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது.

இவ் விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நேற்று சனிக்கிழமை (12) பிற்பகல் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

நெல்லியடி திருமகள் சோதி வீதியை சேர்ந்த பூ.கவிதாசன் (வயது 24) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்தோடு விபத்தில் படுகாமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.  


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.