நீரில் மூழ்கி பல்கலை மாணவன் பலி!!

 


நீராட ஏரிக்குச் சென்ற ஜயவர்த்தனபுர முதலாம் வருட மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இச் சம்பவம் வீரவில ஏரியின் மதகுக்கு அருகில் இடம் பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பதுளை தெமட்டவெல்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் எனவும்

பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் கொண்ட மாணவர்கள் குழு திஸ்ஸமஹாராம தெபரவெவ பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு மாணவனின் வீட்டுக்குச் சென்று திரும்பியபோது இடையில் குறித்த ஏரியில் நீராடச் சென்ற வேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலம் நேற்று (17) இரவு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.