இந்தியாவில் ஈ தொல்லையால் அவதிப்படும் கிராமம்!!

 


ஈ தொல்லை காரணமாக கடந்த் அஒரு வருட காலமாக இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் திருமணம் நடைபெறாமல் உள்ளதாக தகவல் வெளிகியுள்ளது.

உத்தர பிரதேசம், ஹர்தோய் என்னும் பகுதியில் அமைந்துள்ளது பதைய்யன் புர்வா கிராமம்.

இங்கு கடந்த ஒரு வருடமாக திருமணம் நடைபெறவில்லையாம். ஏனெனில் அக் கிராமத்தில் ஈக்கள் தொல்லை காரணமாக அங்குள்ள இளைஞர்களுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லையாம்.

அதுமட்டுமல்லாது ஏற்கனவே திருமணம் முடிந்து அங்கே வாழ்ந்து வரும் பெண்களும் தாய் வீட்டிற்கு சென்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அப்பகுதியில் கோழிப் பண்ணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் தான், அந்த கிராமத்தில் ஈக்கள் தொல்லை அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனைதொடர்ந்து 3 ஆண்டுகளில் ஈக்கள் தொல்லை அதிகரித்ததால் மக்கள் போராட்டம் கூட நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், உத்திர பிரதேசத்தில் குயியன்ம் தாஹி, சேலம்பூர், ஜல்புர்வா, நயா கான் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களும் இதனால் அவதியுற்று வருகின்றனராம்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.