.இலங்கை மாணவர்களுக்காக சீனாவிலிருந்து அரிசி!!

 


இலங்கைக்கான உதவியாக சீனாவினால் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 10,000 மெற்றிக் தொன் அரிசி கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 10,000 மெற்றிக் தொன் அரிசியின், இறுதிப் பகுதியான 1,000 மெற்றிக் தொன் அரிசியுடனான கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள 7,900 பாடசாலைகளில் உள்ள ஒரு மில்லியன் மாணவர்களின் போசாக்கு தேவைக்காக குறித்த அரிசி இருப்பு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.