செம்பி பட விமர்சனம்!!
பழங்குடியின மக்களில் ஒருவரான மூதாட்டி கோவை சரளா தனது பேத்தியுடன் { செம்பி } புலியூர் - கொடைக்கானலில் வாழ்ந்து வருகிறார். மலையில் கிடைக்கும் தேன் உள்ளிட்ட பல பொருட்களை சேகரித்து, அதை சந்தையில் விற்று காசாக்கி வரும் கோவை சரளா, ஒரு முறை மலையின் கடினமான இடத்தில் இருந்து தேன் எடுக்கிறார்.
இதை தனது பேத்தியிடம் கொடுத்து சந்தையில் விற்று வரும்படி அனுப்புகிறார். சந்தைக்கு செல்லும் வழியில் 10 வயது சிறுமி செம்பியை, மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து விடுகிறார்கள். தனது பேத்தி செம்பி மலையின் ஒரு பகுதியில் அடிபட்டு கிடப்பதாக கோவை சரளாவிற்கு செய்தி வருகிறது.
விரைந்து செல்லும் கோவை சரளா தனது பேத்தியை உடனடியாக அங்கிருந்து தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார். மருத்துவமனையில் செம்பியை பரிசோதனை செய்த மருத்துவர், உங்கள் பேத்தியை சிலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் என்று கூறுகிறார். இதன்பின், மருத்துவமனையில் இருந்து காவல் துறைக்கு செய்தி செல்ல, உடனடியாக இந்த விஷயத்தை விசாரணை செய்ய காவல் துறையில் இருந்து இன்ஸ்பெக்டர் வருகிறார்.
இந்த விசாரணையில் 10 வயது சிறுமி செம்பியை பாலியல் வன்கொடுமை செய்தது எதிர்க்கட்சி தலைவரின் மகனும், அவனுடைய நண்பர்களும் என்று தெரிய வருகிறது. இதை தெரிந்துகொண்ட அந்த இன்ஸ்பெக்டர் செம்பிக்கு நீதியை தேடி தராமல், செம்பியை கற்பழித்தவர்களிடம் ரூ. 3 கோடி பேரம் பேசி இந்த கேஸை முடிக்க பார்க்கிறார்.
இந்த கேஸை முடிக்க வேண்டும் என்பதினால் கோவை சரளாவிடம் கையெழுத்து வாங்க அவருடைய வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் செல்கிறார். ஆனால், விஷயத்தை தெரிந்துகொண்ட கோவை சரளா, நான் கையெழுத்து போடமாட்டேன் என் பேத்திக்கு நடந்த அநியாயத்திற்கு நீதி வேண்டும் என்று கூற, இன்ஸ்பெக்டருக்கும் - கோவை சரளாவிற்கும் மோதல் ஏற்படுகிறது.
இந்த அடிதடியில் இன்ஸ்பெக்டரை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தனது பேத்தியுடன் தப்பித்துவிடுகிறார் கோவை சரளா. அப்போது செல்லும் வழியில் வரும் 'அன்பு' பேருந்தில் செம்பியுடன் ஏறும் கோவை சரளா அங்கு தான் அஸ்வினை சந்திக்கிறார். இவர்களின் சந்திப்புக்கு பின் நடந்தது என்ன? செம்பிக்கு நீதி கிடைத்ததா? அந்த மூன்று போரையும் சட்டம் தண்டித்ததா? என்பதே படத்தின் மீதி கதை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை