கடற்படைத் தளபதிக்குப் பதவி உயர்வு!!

 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன இன்று முதல் அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அவர் 2020 ஜூலை 15 அன்று இலங்கை கடற்படையின் 24 ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன 4-நட்சத்திர தரத்திற்கு உயர்த்தப்பட்டதும், கடற்படைத் தலைமையகத்தை வந்தடைந்தார், அங்கு அவருக்கு கடற்படை மரபுகளுக்கு ஏற்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, 1985 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் 13ஆவது உள்வாங்கலின் அதிகாரி கேடட்டாக இலங்கை கடற்படையில் இணைந்தார். கடற்படைக்கும் இலங்கைக்கும் குறிப்பிடத்தக்க சேவையை ஆற்றியுள்ள இவர், 37 வருடங்களுக்கும் மேலான தனது கடற்படை வாழ்க்கையில் நாளை (18) விடைபெறவுள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.