9,417 பொலிஸ் அதிகாரிகளுக்கு தரமுயர்வு!!

 


9,417 பொலிஸ் அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.


இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் சமர்ப்பித்திருந்தார்.


அதன்படி, 8,312 ஆண் பொலிஸ் அதிகாரிகளும், 1,105 பெண் பொலிஸ் அதிகாரிகளும் அடுத்த பதவிக்கு தரமுயர்வு பெறவுள்ளனர்.


தற்போது பொலிஸ் கான்ஸ்டபிள்களாகவும், பொலிஸ் பரிசோதகர்களாகவும் பணியாற்றி வருபவர்களே இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.