கடற்கரையில் ஒதுங்கிய தெப்பம்!!
தமிழகத்தின் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரைப் பகுதியில் மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று நேற்று மதியம் கரை ஒதுங்கியுள்ளது.
தங்கச்சிமடம் காவல் நிலைய பொலிசார், கடலோர பாதுகாப்பு குழும பொலிசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
.மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் இது போன்ற தெப்பங்கள் புத்தமத திருவிழாக்களின் போது தயாரித்து கடலில் விடப்படுவது வழக்கமாக உள்ள நிலையில் மியன்மார் நாட்டில் இருந்து குறித்த தெப்பம் நீரோட்டத்துடன் இழுத்து வரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை