இந்திய வீரருக்கு கிடைத்த ஐ.சி.சி யின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருது!!

 

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஒவ்வொரு வருடமும் சிறந்த டி20 வீரருக்கான விருந்து வழங்கப்படுகின்றது.



அந்தவகையில், 2022 ம் ஆண்டிற்கான சிறந்த டி20 வீரருக்கான விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யா குமார் யாதவ் பெற்றுள்ளார்.


அண்மைக் காலங்களில் டி20 போட்டிகளில் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியமைக்காக சூர்யா குமார் யாதவ் குறித்த விருதை தனதாக்கியுள்ளார்.


2022-ம் ஆண்டில் 31 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யா குமார் 1164 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன், 46.56 சராசரியுடன், 187.46 ஸ்ட்ரைக் ரேட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, இதுவரை 45 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1578 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், அதில் 3 சதங்களும் 13 அரை சதங்களும் உள்ளடங்கும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.