கனடாவில் இருந்து வந்தவரின் செவிப்பறையை கிழித்த யாழ் யுவதி!

 


யாழ் யுவதி அடித்த அடியில் கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நபர் ஒருவரின் செவிப்பறை கிழிந்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.


யாழ்.  கசூரினா கடற்கரையில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


கடந்த மாதம் கட்னடாவில் இருந்து நாட்டுக்கு வந்த குறித்த நபர் புத்தாண்டு தினத்தன்று நண்பர்கள் சிலருடன் கசூரினா கடற்கரைக்குச் சென்றுள்ளார். அங்கு போதை தலைக்கேறிய நபர் தண்ணீருக்குள் நின்றபடி அங்கிருந்த யுவதி ஒருவரைத் தகாத வார்த்தைகளால் கேலி பேசியுள்ளார்.


இதனால் ஆத்திரம் அடைத்த குறித்த யுவதி, கனடாக்காரர் தண்ணீரில் இருந்து வெளியே வரும்வரை காத்திருந்து அவர் கன்னத்தில் ஓங்கி அறைத்ததாகக் கூறப்படுகின்றது.


யுவதியின் அறையால் செவிப்பறை கிழிந்ததால் யாழ்ப்பாண மருத்துவமனை ஒன்றில் குறித்த கனடா நபர் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகின்றது.


அதேவேளை யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதைபொருள் பாவனைகள் இளையோர் மத்தியில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவ்வாறான நிலையில் பொதுவெளியில் அத்து மீறிய நபரை பெண் தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.