இரகசியமாக நுழைந்த அமெரிக்க விமானம்!!
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விசேட விமானங்களில் அமெரிக்காவின் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரி உட்பட 20 பேர் கொண்ட குழுவினர் கட்டுநாகயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த விமானம் நேற்று இரவு 07.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகின்றது.
அவர்களின் வருகையை முன்னிட்டு சுமார் 03 நாட்களாக கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் நேற்று பிற்பகல் முதல் இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Boeing C-17 A Globemaster ரக விமானத்திலேயே இவர்கள் இலங்கைக்குள் வந்துள்ள நிலையில், இந்த விமானம் கிரீஸ் நாட்டில் இருந்து வந்துள்ளது. எனினும் இந்த விமானம் இலங்கை வந்தமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை