விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு இயங்குகிறது - அமெரிக்கா!!
விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதம் குறித்த 2021ஆம் ஆண்டிற்கான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி நிதிதிரட்டி தமது செயற்பாடுகளிற்கு பயன்படுத்துகின்றதாகவும் அதில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த 2009இல் இலங்கை அரசாங்கத்தினால் இராணுவ ரீதியில் தோல்வியடைந்த போதிலும் விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆதரவாளர்கள் வலையமைப்பும் நிதி ஆதரவும் தொடர்கின்றதாகவும் அமெரிக்கா சுட்டிகாட்டியுள்ளது.
அதேவேளை 2009 முதல் விடுதலைப்புலிகள் அமைப்பு செயல்பாடின்றி உள்ளதுடன் 2009ஆம் ஆண்டின் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் எந்த தாக்குதல்களும் பதிவாகவில்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை