சுவிஸில் இடம்பெற்ற கொடூர சம்பவம் - சிற்றுண்டிச் சாலையில் மனைவியைப குத்திக்கொன்ற கணவன்!!
சிற்றுண்டிச் சாலையில் வைத்து பலரும் பார்த்திருக்க கருத்து முரண்பாடு காரணமாக மனைவியை கணவன் குத்திக்கொன்ற சம்பவம் சுவிஸில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழர்களான இவர்கள், சுவிஸ் - ஆர்கெவ் - கான்டன், ரப்பர்ஸ்வ் பகுதியில் "பென்னர்ஸ் எர்ஸ்கெவ் " என்ற சிற்றுண்டிச் சாலைக்குச் சென்ற வேளை, காலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
47 வயதான பெண் இரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்த போது, அங்கு சென்ற பொலிசார் , காப்பாற்றுவதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை எனவும் 57 வயதான கணவர் பொலிசாரிடம் சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை