அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி!!

 


பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 20 இலட்சம் ஏழைக்குடும்பங்களுக்கு தலா 10 கிலோகிராம் அரிசியை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலேயே இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 18, 000 பேருக்கு நிலுவையிலுள்ள ஓய்வூதியத் தொகையை கட்டம் கட்டமாக வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.