துருக்கிப் பேரழிவு ஏற்கனவே கணிக்கப்பட்டதா!!
டச்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் ஹூகெர்பீட்ஸ் (frank hoogerbeets) துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட போவதை 3 நாட்களுக்கு முன்பே கணித்து கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கியில் நேற்று மட்டும் 3-முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல் சிரியாவில், இரண்டுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால், பல கட்டடங்கள் தரைமட்டமாகியதோடு, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானோர் எண்னிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
அந்த அச்சம் அடங்குவதற்குள் 2-வது நாளாக துருக்கியில், இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டராக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை