உயிருக்காகப் போராடிய மனைவியை மீட்க கணவர் செய்த நெகிழ்ச்சி செயல்!!
சீனாவில் ஆடவர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவி உயிருக்காகப் போராடிய நிலையில் பிரிந்த கணவர், மீண்டும் மறுமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி ரத்த சோகையால் உயிருக்குப் போராடியது அவருக்குத் தெரியவந்தது. எனினும் தமது காதலும் கடப்பாடும் அவரைக் காப்பாற்றும் என்று நம்பினார் முன்னாள் கணவர்.
மறுமணம் செய்த பின்னர், அவரது மனைவி அவசரச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் , தற்போது மனைவியின் உயிருக்கு ஆபத்து இல்லை என அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பிரிந்த பின் தம்பதி மீண்டும் திருமணம் செய்த காணொளியை மில்லியன் கணக்கான இணையவாசிகள் பார்வையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை