வாய்த்தர்க்கத்தால் பறிபோன உயிர்!!


மது அருந்திக் கொண்டிருந்த இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.


பொல்கஹவெல ஹவனகல பிரதேசத்தில் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தாக்குதலில் படுகாயமடைந்தவர் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


சம்பவத்தில் வெலிக்கடஹேன, பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் 40 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.