யாழில் இடம்பெற்ற அதிரடிச் சம்பவம்- பொருள் விற்ற பெண்ணும் வாங்கச் சென்ற மாணவன் உட்பட பத்து பேரும் கைது!!


யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்று (28) மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பெண் வியாபாரியிடம் ஹெரோயின் வாங்கிப் பாவிக்கும் 10 வாடிக்கையாளர்களும்  நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்  எனவும், கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


போதைப் பொருள் வியாபாரி நீண்ட காலமாக  போதை பொருள்  விற்று வருகின்றமை தொடர்பில்   யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினருக்கு   கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு  போதைப் பொருள் வாங்கியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.