சுகதேகியாக 121 வயது வரை வாழ்ந்து மரணித்த மூதாட்டி!!
புபிரே புகா என்ற மூதாட்டியே வயது முதிர்வு காரணமாக நேற்றைய தினம் (16-03-2023) மரணமடைந்துள்ளார்.
121 வயதாகியும் இவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்துள்ளார்.
மேலும், இதுவரை இவர் மருத்துவமனை பக்கமே சென்றது இல்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மூதாட்டி புபிரே புகா மரணமடைந்த செய்தி அறிந்ததும் உறவினர்கள், கிராம மக்கள் ஒன்று திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர் இத்தனை வயது வரை வாழ்ந்ததை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
மேலும் கடந்த மாதம் நடந்த நாகாலாந்து சட்டசபை தேர்தலில் இவர் தபால் ஓட்டு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை