பரீட்சைகள் தாமதிக்கும் என திடீர் அறிவிப்பு வெளியானது!!

 


ஆசிரியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடருமாக இருந்தால் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைகளும், 2022ம் ஆண்டின் உயர்தர பரீட்சை பெறுபேறுகளும் தாமதிக்கும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.


பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரி, விடைத்தாள் திருத்தப் பணிகளை ஆசிரியர்கள் புறக்கணித்து வருகின்றனர்.


அமைச்சரவை அனுமதி பெற்று கொடுப்பனவை அதிகரித்திருந்தாலும், அதனையும் ஆசிரியர்கள் ஏற்க மறுத்து வருகிறார்கள்.


நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருதி ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சற்று நெகிழ்வுப் போக்குடன் நடந்துக் கொள்ள வேண்டும், என்று அமைச்சர் கூறியுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



  



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.