நாட்டின் நெருக்கடிக்கு இன அழிப்பு போரே காரணம் - வசந்த முதலிகே!!

  


இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு நாட்டில் இடம்பெற்ற இன அழிப்புப் போரே பிரதான காரணி என்பதை ஏற்றுக்கொள்வதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான சந்திப்பின்போது, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமல்லாது,   கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை என்றும் இப்போது நீங்கள் கைது செய்யப்பட்ட பின் தான் குரல் எழுப்புகின்றீர்கள் எனவும் கேட்கப்பட்டபோது அவர் பதில் பேசாது மௌனம் காத்ததாக கூறப்படுகிறது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.