மகளின் தலையில் அசிட் ஊற்றிய தந்தை!

 


மகளின் தலையில் தந்தை ஒருவர் அசிட் ஊற்றிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அத்தோடு இச் சம்பவத்தில் மகள் மற்றும் தந்தை பலத்த எரிகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் அதிக மதுபானம் அருந்துபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர் அடிக்கடி மதுபான அருந்திவந்து மகள் மற்றும் குடும்பத்தினரை துன்புறுத்துவதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் 25 வயதுடைய மகள் எனவும் இவர் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன், சந்தேகநபரான தந்தை 52 வயதுடையவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் புலத்சிங்கள பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருபவரென தெரியவந்துள்ளது.

மேலும் இந்த இறப்பர் தொழிற்சாலையில் இருந்து அவர் அசிட் போத்தலை திருடியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomb



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.