தாதியால் மயங்கிய மருத்துவர்!!
![]() |
தாதி ஒருவர் வழங்கிய பால் தேநீரை அருந்தியதாகக் கூறப்படும் வைத்தியர் ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த வைத்தியருக்கு இரவு 10 மணியளவில் தாதி ஒருவர் தேநீர் வழங்கியுள்ளார்.
அதனை அருந்திய பின்னர் மருத்துவர் உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்றபோது மயக்கம் ஏற்பட்ட நிலையில் வைத்தியர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை கொழும்பைச் சேர்ந்த வைத்தியர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனியாக வசித்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை