பிரபல மருத்துவமனையின் அதிரடி அறிவிப்பு!!

 


பொலிஸாரால் கொண்டுவரப்படும் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ள சடலங்களை பொறுப்பேற்க முடியாது என களுபோவில போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் களுபோவில போதனா வைத்தியசாலை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அடையாளம் காணப்படாத நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்திய சாலையின் பிரேத அறையில் 36 சடலங்களையே வைக்கமுடியும் என்பதனால் அடையாளம் காணப்படாத சடலங்களை கொண்டு வரவேண்டாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இது தொடர்பில் நுகேகொடை மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் களுபோவில போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.