இப்படியும் பண மோசடி!!

 


களுத்துறையில் ஒரு வாரத்திற்கு முன்னர் உயிரிழந்தவர் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு வந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புலத்சிங்கள பிரதேசத்தில் ஒரு வாரத்திற்கு முன்னர் தனது சகோதரர் இறந்து விட்டதாக மரண நிவாரண சங்கத்திடம் கூறி 26000 ரூபாவை பெண் ஒருவர் மோசடியாக பெற்றுள்ளார்.

புளத்சிங்கள மொல்காவ பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவர் கலவான பிரதேசத்தில் வசிக்கும் தனது கணவரின் சகோதரன் இறந்துவிட்டதாக ஏமாற்றி மோசடியாக பணம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.


பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார்.

குறித்த நபர் உயிரிழந்ததாக கூறப்பட்டமையினால் மரண நிவாரண சங்கத்தினர் மரண சடங்குகளை செய்ய தயாராகியுள்ளனர்.

எனினும் மரண நிகழ்வு வேறு ஊரில் நடப்பதாக கூறி தடுக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.