வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!!
புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போல தேவையான எரிபொருள் இருப்புகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி,
முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீட்டரில் இருந்து 8 லீற்றராகவும்
மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீட்டரில் இருந்து 7 லீற்றராகவும்
பேருந்துகளுக்கு 40 லீற்றரில் இருந்து 60 லீற்றராகவும்
கார்களுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும்
லொரிகளுக்கு 50 லீற்றரில் இருந்து 75 லீற்றராகவும்
சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும்
வேன்களுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும்
land vehicles 15 லீற்றரில் இருந்து 25 லீற்றராகவும்
Quadric cycle 4 லீற்றரில் இருந்து 6 லீற்றராகவும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை