பிரான்சில் மேதினத்தில் பல்லின மக்களோடு பயணித்த தமிழ்த் தேசிய ஊர்தி!

 

பிரான்சு தேசத்தில் தொழிலாளர்களின் உரிமைக்காக ஆண்டு தோறும் தொழிலாளர் நாளான மே 01 நேற்று பிரான்சின் பல இடங்களில் தொழிற்கட்சிகள், விடுதலை அமைப்புக்கள், தமது கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் கவனயீர்ப்பு பேரணியை நடாத்தினர்.
பிரான்சு வாழ் தமிழீழ மக்களும் இந்த பேரணியில் தமிழீழ தேசியத்தலைவரின் திருவுருவப்படத்திற்கு பின்னால், தமிழீழ தேசத்தின் கொடிகளை ஏந்தியும் கடந்த 75 வருடங்களாக சிறீலங்கா என்னும் தேசத்தின் சிங்கள அரசாங்கத்தால் அந்த நாட்டின் பூர்வீக மக்களை அடிமைகளாகவும், அவர்களின் தொழில் அனைத்தையும் பறிப்பதோடு அவர்களில் இலட்சக்கணக்கான உயிர்ப் பலியை இனவழிப்பின் ஊடாகச் செய்து வருவதோடு, இன்று பௌத்தம் என்கின்ற போர்வையில் நிலங்களையும், வழிப்பாட்டு கோயில்களை அழிப்பதையும் தெரியப்படுத்தும் பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் இப்போரணியில் கலந்துகொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் மக்கள்பேரவை செயற்பாட்டாளர்கள் பிரெஞ்சு மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.