முச்சக்கர வண்டிச் சாரதிகளிடம் நூதனமான திருட்டு!!
முச்சக்கர வண்டிச் சாரதிகளிடம் நூதனமான முறையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்த முறைப்பாடு காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று(04) பகல் பருத்தித்துறையில் இருந்து முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி கீரிமலையில் உள்ள காணிகளைப் பார்ககவென கூறி பெண் ஒருவரும் இரண்டு ஆண்களும் பயணித்த நிலையில் முச்சக்கர வண்டிச் சாரதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு அவரிடம் இருந்து பணம், நகை என்பவற்றை திருடியுள்ளனர்.
அதே கும்பல் , மீண்டும் கீரிமலையில் இருந்து முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தி பருத்தித்துறைக்கு செல்லும் வழியில் அந்த சாரதிக்கும் குளிர்பானத்திற்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு சாரதியிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முச்சக்கர வண்டி சாரதிகள் இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையிலும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை