வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது பிரபல ஜோடி!!

 


பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் சந்திரசேகர் இருவரும் திருமணம் செய்துக் கொண்டமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

அந்த நாளில் இருந்து அவர்கள் இருவர் தொடர்பிலும் தொடர்ந்து ஏதாவது செய்திகள் வந்துகொண்டே இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில், ரவீந்தர் தனது தனி படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் மகாலட்சுமி -  ரவீந்தர் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யப் போவதாக வதந்திகள் வேகமாக பரவின.

அந்த வதந்திகளுக்கு மகாலட்சுமி - ரவீந்தர் ஜோடி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தங்ளது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உரையாடல் போல, வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார் ரவீந்திரன். அவரது பதிவில்,

டேய் புருஷா இன்ஸ்டாகிராமில் உனது சோலோ படத்தைப் பதிவேற்ற வேண்டாம் என்று எத்தனை முறை கூறியிருக்கிறேன். மீண்டும் முழு சமூக வலைதளங்களும் நாம் பிரிந்துவிட்டதாகச் சொல்கிறது..

மவனே இனிமேல் இந்தத் தவறை மீண்டும் செய்தால், எனக்கு பிடித்த சேமியா உப்புமா 3 வேளை உணவாக எப்போதும் வழங்கப்படும் யூடியூப் கிசுகிசு குழுவுக்கு

என் மைண்ட் வாய்ஸ் - இன்னும்டா நாங்க ட்ரெண்ட்... இதுக்கு இல்லையாடா ஒரு எண்ட்...  என  TR  பாணியில்  பதிவிட்டதோடு   நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம், அதற்கும் மேல் எங்கள் மீது அன்பு செலுத்துபவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார் ரவீந்தர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.