கொழும்பில் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு - காரணம் இதுதான்!!

 


கொழும்பில் நேற்று முதல் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

முக்கியமாக கொழும்பு பல்கலைக்கழகம் சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், கொள்ளுப்பட்டி சுற்றுவட்டம் போன்ற பகுதிகளில் மிக அதிகளவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளானது அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் சதித்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் அடிப்படையிலானது எனத் தெரியவந்துள்ளது.


கொழும்பு பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் அரசாங்கத்துக்கு பாரிய அழுத்தம் கொடுக்கும் வகையில்  மாபெரும் செயற்பாடு ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் புலனாய்வுத் துறை , அரசாங்கத்தின் உயர் மட்டத்துக்கு தகவல் வழங்கியிருந்தது.


இதன் அடிப்படையில் அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை இந்த நடவடிக்கையின் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக நிகழவந்த மாபெரும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரதானி ஒருவர் கூறியுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.