இளம் பெண் விபரீத முடிவு!!
மட்டக்களப்பில் திருமணமாகி 3 மாதங்களில் இளம் பெண் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
அம்பிளாந்துறையை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணே உயிரை மாயத்துள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த 12ஆம் திகதி எருவிலில் உள்ள கணவர் வீட்டில் அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை உயிரிழந்த பெண்ணுக்கு 3 மாதங்களின் முன்னரே திருமணமாகியதாகவும், ஏற்கெனவே திருமணமாகியதை மறைத்து கணவர் , அவரை இரண்டாம் திருமணம் செய்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கணவர் ஏமாற்றியதை அறிந்த மனைவி உயிரை மாய்த்துக் கொண்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை