உயிரைக் காத்த நாய்க்கு விருது - எங்கே தெரியுமா!!

 


குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட  நாய் ஒன்று அவரைக் காப்பாற்றிய  சம்பவம்  நடந்துள்ளது.

ஜப்பான், சிபா நகரில் உள்ள வகாபா- குவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். இதனை மற்றவர்கள் கவனிக்காத நிலையில், அங்கிருந்த 5 வயதான குமி என்கிற மங்கிரோல் வகை நாய் இடைவிடாமல் குரைத்து கவனத்தை ஈர்த்தது.


அங்கிருந்தவர்கள் நாயின் அருகில் சரிந்து கிடந்த நபரை பார்த்து அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த நபர் சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி உயிரை காப்பாற்றப்பட்டார்.


இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி நடந்தது. இந்நிலையில், மாரடைப்பால் சரிந்து கீழே விழுந்த நபரின் உயிரை காப்பாற்றிய குமு நாய்க்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.