சிறுவன் வழங்கிய போலி முறைப்பாடு!!

 


போலியான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த  11 வயது பாடசாலை மாணவனை பொலிஸார் எச்சரித்து அனுப்பிய  சம்பவம் ஒன்று நரஹேன்பிட்ட பகுதியில் பதிவாகியுள்ளது.

வான் ஒன்றில் வந்த குழுவினர் , தான் பாடசாலைக்குச் சென்று திரும்பும் போது  தன்னைக் கடத்த முயற்சித்ததாகவும்   சிறுவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

பொலிஸார்  சிறுவனை விசாரித்ததில் அவர் கூறியது பொய் என்பது தெரியவந்ததை அடுத்து அச்சிறுத்திக்கேட்டபோது,  சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் தான் பார்த்த ஒரு காணொளியை வைத்து இப்படியொரு கதையை தான் உருவாக்கியதாக சிறுவன் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதேவேளை பாடசாலையிலிருந்து வரும் போது வானில் வந்தவர்கள் தன்னை கொழும்பு பார்க் வீதியில் வைத்து கடத்த முயற்சித்ததாக சிறுவன் தனது தந்தைக்கும் அறிவித்துள்ளான்.

அதைத் தொடர்ந்து தந்தை மகனுடன் பொலிஸ் நிலையம் சென்று (23) முறைப்பாட்டை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரித்த பொலிஸார் குறித்த பகுதியிலிருந்த சிசிடிவி கமராவை சோதித்தபோது அவ்வாறான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதை   கண்டறிந்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.