ஆசிரியர் பணி நிறைவு கவிதை!!

 


ஆசிரியப்பணி

அகம் நிறை பணி

ஆத்மார்த்தமான பணி....


அப்பணிதனை

நேர்மை

விடாமுயற்சி 

தொழில் பற்று

என்பவற்றுடன்

ஆற்றி

இன்று ஓய்வு பெறுகிறார் 

எங்கள் ஆசிரியர் 


ஆசான் வரையும் 

வண்ணக்கோலங்களே

மாணவ மணிகள். 

நீங்கள் வரைந்த 

கோலங்கள் 

எத்தனை எத்தனை. 


இன்று 

உங்கள் ஓய்வு நாள்.

பிரிய முடியாது அழுகிறது

பள்ளிக்கூடமும்

அதன் உறவுகளும்.


பணி ஓய்வல்ல இது

பணி நிறைவென்பேன்.

ஏணியாய் நின்று

ஏற்றமும் கொடுத்து 

பிள்ளைகள் உயர

பெருமிதம் கொண்டீர்கள்..


  அறியாமை களையும் 

அருந்தொண்டு புரிந்து 

 அன்னையைப் போல

அகத்தினில் பதிந்து 


எண்ணத்தில் உயர்ந்து  

மாணவ மனங்களில் 

நிறைந்தீர்கள்...


விருதுகள் பல பெற்று 

வெற்றியைப் பெற்றீர்கள்..



எங்கள் மனங்கள் கனக்கிறது

இந்தப் பிரிவு கண்டு..


ஓய்வு காலம் 

வளமும் நலமும்

தந்து - தாங்கள்

இனிதே வாழ வாழ்த்துகிறோம்..




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.