சிக்கிய அரசியல்வாதியின் மகன்!
தெல்தெனிய, கெங்கல்ல அதிசொகுசு வாகன விற்பனை நிறுவனத்தில் அதிசொகுசு ஜீப் வண்டிகள் மூன்று மற்றும் வானொன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் அரசியல்வாதி ஒருவரின் மகன் சிக்கியுள்ளார்.
கொள்ளை சம்பவம் தொடர்பில், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரின் மகன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினருக்கு உரிய பல்லேகம தெரகமுவே வீட்டுக்கு பின்புறமாக உள்ள, வாகனம் திருத்தும் நிலையத்தில் ஜீப் வண்டிகள் இரண்டு கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பில் வத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை