கனடா வாழ் தமிழ் மக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!!

 


கனடாவில் உள்ள தமிழ் மக்களிடம், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஆதரவை தருமாறு கோரியுள்ளது.

கனடாவுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் துஷார ரொட்ரிகோ இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

கனடாவில் உள்ள இலங்கைத் தமிழ் சமூகம் கனேடிய பொருளாதாரம் கனடாவின் கலாசாரத்தில் பாரிய சக்தியாக மாறியுள்ளது.

அத்துடன் வலுவான தமிழ் வர்த்தக சமூகமும் இளம் தமிழ் தொழில் வல்லுநர்களும் இலங்கைத் தமிழர்களை கனேடிய சமூகத்துடன் இலகுவாக இணைப்பதற்கான சக்தியாக உள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார் .

குறித்த நிகழ்வில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் ஆயிரத்து 500க்கும் அதிகமான கனடாவில் வசிக்கும் தமிழ் மக்கள் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.