கடிதம் எழுதி உயிரை மாய்த்து கொண்ட சிறுமி!!

 


ராகமயில் 14 வயது சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 

ராகம கந்தானை பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சிறுமி தான் ஆணாக வாழ ஆசைப்படுவதாக கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்ணாக பிறந்து வாழ்வது மிகவும் வருத்தமாக உள்ளதாகவும் சிறுவனைப் போல் வாழ விரும்புகிறேன் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண் நடிகர் ஒருவரை தான் அதிகம் விரும்புவதாகவும், ஆண் குழந்தையாக வாழ விரும்புவதாகவும்" அவர் எழுதிய கடிதத்தில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.