யாழ் - இளவாலையில் வாள்வெட்டு!!
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் வைத்து 29 வயதுடைய இளைஞர் மீது இன்று மதியம் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன் தனது நண்பனை சந்திப்பதற்காக இளவாலை பகுதிக்கு வந்துகொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கொண்ட கும்பல் அவர்மீது இவ்வாறு தாக்குதல் நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் குறித்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை