இன்றைய வானிலை குறித்த அறிவிப்பு!!

 


இலங்கையின் தென்மேற்கு பகுதியில் பலத்த மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


அதன்படி  களுத்துறை மாவட்டத்தில் சில இடங்களில்  பலத்த மழை பெய்யும் எனவும் 

சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

வடக்கு மற்றும் வட்டத்தின் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம்  மாவட்டங்களிலும் திருகோணமலையிலும் 40 - 45 கிலோமீட்டர் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கூறப்படுகிறது. 


இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.