யாசகம் பெற்ற பெண் சடலமாக மீட்பு!!

 


பதுளை நகரில், பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதிக்கு அருகே யாசகம் பெற்றுவந்த பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பதுளை, உயன்வத்தை – டியான்வெல பகுதியில் வசித்த கந்தையா நாகமணி (வயது – 65) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீதியில் பெண்ணொருவர் இறந்து கிடப்பதாக பதுளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலினை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பதுளை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த பெண் பதுளை நகரில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தவர் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் எவரும் இதுவரை முன்வரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.