வெளிநாட்டில் இருந்து யாழ் வந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!
லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவன் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுவன் நேற்றையதினம் கடலுக்கு குளிக்கச் சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,
உறவினரின் மரணச்சடங்கிற்காக குடும்பத்தினருடன் வந்திருந்த 6 வயதுச் சிறுவன் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடலில் குளிக்கச் சென்ற போது, மூழ்கிய சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
சடலம், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை