திருமணமாகி 4 மாதங்களில் குடும்ப பெண் பரிதாப மரணம்!!

 


யாழ்ப்பாணத்தில் திருமணமாகி 4 மாதங்களேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

27 வயதான சுகிர்தராசா நிதர்சினி என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தெல்லிப்பழை - மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நேற்றையதினம் (16-07-2023) வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் நேற்றையதினம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் இன்றையதினம் (17-07-2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதன்பின்னர் அவரது சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி திரு. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.