கின்னஸில் இடம்பிபித்த பாகிஸ்தான் குடும்பம்!!

 


பாகிஸ்தான் குடும்பமொன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 

அந்தக் குடும்பத்தில் உள்ள 9 பேருமே  ஒரே மாதம் ஒரே திகதி பிறந்துள்ளதனால் இச் சாதனை பதிவாகியுள்ளது.

பாகிஸ்தானின் லர்கானா பகுதியைச் சேர்ந்த அமீர் அலி, இவரது மனைவி குதேஜா. இவர்களுக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் இரட்டையர்களும், ஆண் இரட்டையர்களும் அடங்குவர்.

இவர்கள் 9 பேருமே ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அன்று பிறந்துள்ளனர். இந்நிலையில் இது தற்பொது உலக சாதனையாக மாறி இருப்பதாக கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் இச் சாதனையைப் படைத்திருந்தனர். அவர்கள் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி அன்று பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அச்சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. அமீர் அலி- குதேஜாவின் திருமண நாளும் ஓகஸ்ட் 1 என்பது கூடுதல் சிறப்பாகும். இந்நிலையில் இது கடவுளின் பரிசு என அத்தம்பதியினர் மகிழ்ச்சியுடன் தெனிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.