இலங்கை யுவதிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்!!
நடிப்பதற்கு வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணம் கேட்டு யுவதிகளை ஏமாற்றி வரும் சம்பவம் ஒன்று இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக் குழுவை தேடி தலங்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த குழுவினர் டிக்டொக் சமூக வலைத்தளதினூடாக யுவதிகளின் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிசாருக்கு கிடைத்துள்ள வங்கி கணக்கிலக்கம், தொலைபேசி இலக்கம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க தலங்கம பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை