திருடப்பட்ட அரியவகை குரங்குகள்!!
மூன்று அரியவகை கருங்குரங்குகள் அத்திடிய வனவிலங்கு காப்பகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருங்குரங்குகள் களவாடப்பட்டமை தொடர்பில் அத்திடிய வனவிலங்கு காப்பகத்தின் பாதுகாப்பு அதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மூன்று கருங்குரங்குகளும் வெள்ளிக்கிழமை (21) காலை திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo