பணியை ஆரம்பித்தது சந்திராயன்3!!
சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் சனிக்கிழமை அன்று நுழைந்துவிட்டதைக் குறிக்கும் வகையில் நிலாவின் முதல் படங்களை அது இஸ்ரோவுக்கு அனுப்பியுள்ளது.
அந்தப் படங்களைத் தற்போது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விண்கலம் நெருங்கிச் செல்லும்போது நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்கள் பெரிதாகத் தெரிவதைப் படங்கள் காட்டுகின்றன.
சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் ஆகிய பாகங்கள், ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது.
கருத்துகள் இல்லை