வவுனியா இரட்டைக் கொலை - சந்தேக நபரின் சகோதரர் மீது தாக்குதல்!!

 


வவுனியாவில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்து வவுனியா வைத்திசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம், கடந்த மாதம் 23 ஆம் திகதி வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீதே நேற்று (26-08-2023) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தவசிகுளம் பகுதியில் வைத்தே குறித்த நபர் மீது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத் தாக்குதல் சம்பவத்தில் பிரதான சந்தேக நபரின் சகோதரரான 37 வயதுடைய நபர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.