புலம்பெயர் உறவுகளின் உதவியில் உருவான குழாய்கிணறு!!


 புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும்  கவிதா அவர்கள் தமது மகன்கள் சலோபன்,திவ்யன் ஆகியோரின் மகிழ்விற்காகவும் நலனிற்காகவும், யுத்தத்தில் கணவனை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பத்துச் சகோதரி ஒருவரிற்கு குழாய் கிணறொன்றினை அடித்துக்கொடுத்துள்ளார்கள். 


தற்போதுள்ள வறட்சி காரணமாக நீரினைப்பெற மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் பயனாளர்க்கு தக்க சமயத்தில் கிணறினை அடித்துக்கொடுத்து உதவி புரிந்துள்ளனர்.


 இவரது சகோதரியான யாழிசை குறித்த குழாய் கிணறிற்கு நீரிறைக்கும் மோட்டரினை வழங்கி வைத்துள்ளார். 



தமது முகம் காட்டாது இல்லாதோர்க்கு கொடுத்து மகிழும் சகோதரிகள் இருவரிற்கும் பயனாளர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் பலரும் இவர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG 

https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.