கடன் எழிமையான பரிகாரம் சரி செய்யுங்கள்
கடன் தீர கீழ்கண்டவற்றை சரி செய்யுங்கள்
கடன் ஏற்பட காரணம். ஒரு வீட்டின் தென்மேற்கினை வைத்தே ஒருவரின் கடன் அளவ்வினை எளிமையாக அறியலாம்.
வட கிழக்கு பகுதியில் தென் மேற்கினை விட சிறிய அறையாக இருந்தால் கடன் சுமை அதிகரிக்கும். ஏனென்றால் மேற்கண்டவாறு இருக்கக் கூடிய இந்த இடத்தில் கேதுவின் ஆளுமையும் செவ்வாயின் ஆளுமையும் சனியின் ஆளுமையும் இணைவதாக அர்த்தம்.
கடனை அடைக்க அடைக்க மீண்டும் மீண்டும் கடன் வாங்குவதற்கு காரகமான கிரகம் சனி.
குப்பை , அழுக்கு துணிகள்ளும் , வாசனை அற்ற நிலையிலும் படுக்கை அறை இருந்தால் நிச்சயம் கடன் வரும்.
கட்டில் மெத்தை மற்றும் சுத்தமான திரைசீலை இவைகளுடன் கூடிய சுத்தமான படுக்கை அறை இருத்தல் வேண்டும். பீரோ பணப்பெட்டி இவற்றை தென்மேற்கு அறையின் தென்மேற்கு பகுதியில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக வைக்கவும்.
சரி தனித்தனி அறை வசதி இல்லாத சிறிய வீடாக இருந்தால் அதில் நிறைய பொருட்களை வாங்கி குவித்தல் கூடாது. அந்த வீட்டின் இடத்திற்கு தகுந்தார்போல குறைவான மிக குறைவான பொருட்களை மட்டுமே வைத்தல் வேண்டும்.
தீராத நோய்க்காக பணம் செலவு செய்து கொண்டே இருக்க கூடிய வீட்டில் தென்கிழக்கு பாதிக்கப் பட்டு இருக்கும்.
ஞயிறு அன்று ராகு காலத்தில் அருகில் உள்ள நரசிம்மர் ஆலயம் சென்று வழிபடவும். மேற்கண்ட பிரச்சினைக்கு தீர்வு வேண்டி வழிபடவும்.
வடகிழக்கு சிறிய பூஜை அறை கடன், ஆண்கள் சோம்பேரியாக இருத்தல் மற்றும் வாரிசுகளின் திருமண தடையை ஏற்படுத்தும். எனவே இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடி அலைவதில் பலன் இல்லை.
கருத்துகள் இல்லை