மிக விரைவில் கிழக்கு மாகாணத்தில் பாரிய கொண்டாட்டம்!!
கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தால் செப்டெம்பர் 27ம் திகதி முதல் ஒக்டோபர் 1ம் திகதி வரை Tourism and Green Investment என்ற தொனிப்பொருளின் கீழ் சர்வதேச சுற்றுலா வாரம் கொண்டாடப்படவுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஆலோசனையின் படி, மாகாண விளையாட்டு மற்றும் கலாசார திணைக்களத்துடன் இணைந்து சுற்றுலா பணியகத்தால் சர்வதேச சுற்றுலா தின நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இம்மாதம் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் முதல் திகதிவரை நடைபெறவுள்ள சுற்றுலா வாரத்தில் பல்வேறு கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இதனபடி, கடற்கரையில் உணவு திருவிழா (Food Festival), திருகோணமலை டச்பே (DUCHBAY), இசை நிகழ்ச்சி, பட்டம் திருவிழா, கடற்கரை கபடி, கடற்கரை காற்பந்து, கடற்கரை கரபந்து, கார்னிவேல், மரதன் போன்ற பிரமாண்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், விசேடமாக சிறுவர் தினத்தன்று சிறுவர்களுக்கான விசேட நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
பல்வேறு நாடுகளில் இருந்து முக்கியஸ்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo.https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG
https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை